குணாவின்
கைகளில் mobile அடித்துக்கொண்டு இருந்தது, மனதில் வரதனை பற்றிய
கேள்விகள் பல ஓடிக்கொண்டு இருக்கையில் அவனிடமிருந்தே call வருவதால்
அவளுடைய கற்பனை குதிரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அவள் மனதில் வரதன் சற்பமாக இருப்பானோ, அல்ல சாதாரணமாக இருந்து call செய்வானோ என்று பயந்தாள். ஒரு வேல, அவங்க அப்பா call
பண்றாரோ, இல்ல போலீஸ் stationல இருந்து call வருதோ, இப்படி
பல குழப்பத்துடன் phoneஐ attend
செய்தாள் குணா.
குணா
இப்ப உடம்புக்கு எப்படி இருக்கு? Sorry, I am really very very sorry. நேத்து அப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர் பாக்கல. நிறைய விஷயம்
என்னை மீறி நடந்துருச்சு . I am totally out of control yesterday. எனக்கு தெரியும் நேத்து நடந்த எந்த விஷயமும் சாதாரணமானது அல்ல, ஆனா என்னால எல்லாத்துக்கும் விளக்கம் தரா முடியாது. Hello……. குணா....... Hello குணா are you there…..?
..............
.............................
நிசப்தம்
அடங்கிய சில வினாடிக்குப்பின்,
இழந்த நிதானத்தை திரும்ப பெற்ற குணா, தைரியத்தை
திரும்பப்பெற்றவளாக, Yes I am here, but
I don’t know how I am here. தைரியம் அவளின்
வார்த்தையில் இருந்தாலும், பதட்டமும்,
பயமும் அவளின் குரலில் வெளிப்பட்டது. வரதன் நீ எங்க இருக்க,
எப்படி இருக்க..... நா எப்டி.....
குணா hold
on hold on…… இப்போ நா
சொல்லுரதமட்டும் கேளு, நான் எங்க இருக்கேனு எனக்கே தெரியல, இங்க ஒரு ஆறு ஓடுது, இது ஒரு மலைகாடு – அதுவும்
மேற்கு தொடர்ச்சி மலை மாதிரி தெரியுது. நா எப்படி இங்க வந்தேனு எனக்கே தெரியல. Please
எனக்கு உன்ன விட்ட வேற யாரும் help பண்ண
முடியாது...... please help....... ...... call கட்டானது.
அங்க அப்டி என்ன தான் நடக்குது, திரும்பியும் அவனுக்கு
ஏதாவது ஆச்சா, மீண்டும் வரதனின் mobile no. அழுத்தினாள் குணா, the number you have
dialed is switched off, please try later or call sometime.
இப்ப நா என்ன பண்ணுவேன், எங்கனு போயி வரதன தேட, குழம்பியவாறே படுக்கைய விட்டு எழுந்து வெளியே வந்த குணாவிற்கு அதிர்ச்சி.
TN 60J 6058,
அவளின் FZ பைக் வீட்டிற்க்கு வெளியே நின்று
கொண்டு இருந்தது, அதில் வரதனின் டைரி ஒன்று பைக்கின் fuel
tank கவரில் இருப்பது தென்பட்டது. டைரியின் முதல் பக்கத்தில்,
“மனதில் கரைபவை
யாவும் சுமையாகும், என்னுள் புதைந்த சுமையினை உன்னுள் இறக்கி வைக்கிறேன், இனி இவள்தான் (டைரி) என் சுமைதாங்கி..... சுருங்கச்சொன்னாள்
“சு தா”........ “
முதல் பக்கத்தில் இருக்கும் வரிகளின் வலிமையை உணர்ந்த குணா,
இனி இந்த “சு தா” தான் தனக்கு வழி
காட்ட போகும் வழிகாட்டி என உணர்ந்தாள். வரதனின் இருப்பிடம் அறிய சு தாவை புறட்ட ஆரம்பித்தாள்
குணா. ஒவ்வொரு பக்கமும் வாலிபன் ஒருவனின் தனிமை, ஏமாற்றம், விரக்தி, தோல்வி என ஒவ்வொன்றையும் கவிதை நடையாய் எழுதப்பட்டு இருந்தது. இடையே அருள்
என்ற தலைப்பில் இருந்த விஷயம் குணவின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.........
சு தா : குலசாமி நாகபூசனி அம்மன் கோவிலுக்கு போயிருந்தோம், அன்று நான் பால்குடம்
எடுக்கவேண்டும். “மாப்ள சாமி வந்து ஆடுனாத்தான் கைல பால்குடத்தையே குடுபாங்க
இல்லாட்டி நீ விரதம் சரியா இருக்களேனு ஊரே சொல்லும், அதனால
ஒரு performance காட்டிரு.....” என்றான் நண்பன் அசோக்.
ஆனா நா விரதம் நல்லாதான் இருந்தேன், இருப்பினும் எனக்கு அருள்வந்து
ஆடுவது என்பது நாமே நம்மை ஏமாற்றி செய்யும் செயல் என்றும் இது வெறும் மற்றவருக்காக
நாம் செய்யும் கண்காட்சி என்றுமே தோன்றியது. அருள் பெறுவதை இப்போது பரிசோதனை
செய்து பார்க்கும் சித்தம் அமைந்தது என்பதை உணர்ந்தேன்.
உறுமி முழங்க துவங்கியது, உச்சந்தலை முதல் பிட்டம் வரை உள்ள
நரம்புகள் சிலிர்க்க துவங்கின. நாலு பேர் சேர்ந்தாற்போல்
நாற்காலி ஒன்றில் என்னை அமறவைத்து வேப்பிலை கலந்த மஞ்சள் நீரை என் தலையில் உற்ற
ஆரம்பித்தனர், உறுமியின் உறுமலும் வேகமெடுக்க ஆரம்பித்தது, உடல் முழுவதும் புல்லரிப்பு ஏற்பட்டது.
மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் வரதா, இது வெறும் இசைக்கருவி
மற்றும் இதர வஸ்துக்கள் செய்யும் லீலை அன்றி வேறொன்றும் இல்லை என்றது. மூக்கின்
நுனி வரை கோபம் கொப்பளித்து கேள்வி கேட்ட மனதோரத்தை பற்களை துருத்தி நாகை கடித்த
அது கேட்டது உன்மேல் இறங்கி இருக்கும் என்னை
சந்தேகப்படுகிறாயா...? பின்னர் ஒரு சிரிப்பு...... அந்த
சிரிப்பில் சரணடைந்த மனமாணது, கண்களில் நீர் பெருகச்செய்தது.
உடலெங்கும் பரவிய அருள் என்னை நிலையற்று ஆடச்செய்தது. சற்று நேரத்தில் நான்
சற்பமாக கட்டுக்கடங்காமல் உர்ந்த துவங்கினேன். இறுதியில் பால்குடம் கையில்
வாங்கியபின்னரே ஆச்சாரம் தவறாமல் நேற்திகடனை செலுத்த முடிந்தது.
என்னுள் வந்திறங்கிய பேரானந்தமாகிய அம்மனின் அருளை அறிய, பலமுறை வள்ளிபுரம்
செல்ல துவங்கினேன். அங்கிருந்த களிநாகன் என்கிற தாத்தா என்னை பார்த்து, நீ மாற நேரம் வரும்..... மாற நேரம் வரும்........ என கூறிக்கொண்டே
இருப்பார். இது மேலும் எனது ஆர்வத்தை அதிகரிகத்துவங்கியது. அதன் பொருட்டு, அன்னையின் ஆதி அறிய அறிவியலையும், சரித்திரத்தையும், புராணங்களையும் ஒரு சேர அறியும் முயற்ச்சியில் இறங்கினேன். அன்னையின்
வடிவமாகிய சற்பங்களை பற்றிய ஆய்வில் துடங்கியது எனது தேடல்........
·
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து
பாற்கடலை கடைந்தபோது, காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவை வணங்க
மறந்தனர், அதனால் வெளிவந்த அமுதத்தை விநாயகர் திருக்கடையூர் கோவிலில்
லிங்கமாக மாற்றிவிட்டார், அவ்வாறு மாற்றும்போது, சிதறிய அமுதத்தை சற்பங்கள் ருசித்தன, சீனம் கொண்ட
விநாயகன் அவற்றின் நாவை இரண்டாக
பிளந்தான். இதனால் தான் சற்பங்கலுக்கு இன்றுவரை அதன் நாக்கு பிளவுபட்டுவுள்ளது. இருப்பினும்
அமுதம் உண்ட காரணங்களினால் அவைகளுக்கு இறவாமை ஏற்ப்பட்டது,
அதன் பொருட்டே அவை தம்மை தோலுறுத்து புதுப்பித்து கொள்ளும் தன்மையை பெற்றன.
·
சிந்து
சமவெளி நாகாரிகம்(Indus Civilization)
படி சற்பங்கள் அழியாமையின் (immortality) சின்னம்
என்றழைக்கபடுகிறது. சற்பம் ஒன்று தன் வாலை கடித்தவாறு இருக்கும் இதனை ouroborous
என்றழைக்கின்றனர் பண்டைய டிபேடியர்(tibetians). இதன் பொருள் முடிவற்ற, முடிவில்லா என்பதாகும்.
·
மேலும்
சுஷ்ருத சம்கித என்கிற ஆயுர்வேத குறிப்பில், சற்பங்களின் விஷம் மூலம் குணபடுத்தக்கூடிய நோய்களை வகைபடுத்துகின்றனர்.
·
சற்பங்களின்
நாகமணிகள் சர்வலோக நிவாரணி என்றழைக்கப்படுகிறது. இதனாலோ ஏனோ இன்றும் மருத்துவத்தின்
சின்னங்களில் சற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
·
ஐந்து
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில், காட்டெருமை ஒன்று இனம் புரியா நோயினால் இறந்துபோனது, அதன் உடலில் இருந்து நோய் கிருமிகள் காற்றின் மூலம் பரவியது. இதனால் அவை மக்களிடையே
வெகு விரைவாக பரவியது, சித்தம் கொண்ட பாண்டிய மன்னன் நோயின் வீரியத்தையும்
அதற்கான மருத்துவத்தையும் வள்ளிபுரம் கல்வெட்டில் எழுதியுள்ளான்.
·
பாண்டியன்
கூறிய நோய் எலும்புருக்கி, அதாவது TB. அதனை விஷம் கொண்டு முறித்திடுவோம் என்றால்
நாக மாணிக்கம் கொண்டு சரி செய்து உள்ளனர். ஆனால் அதனை உருவாக்க விசித்திரமான வழிமுறைகளை
கையாண்டு உள்ளனர், அவற்றை தெளிவாக என்னால் அக்கல்வெட்டின் மூலம்
உணரமுடிந்தது.
·
இன்றும்
மத்திய இந்தியாவில் சஹ்யாத்ரி என்னும் பகுதியில் 1000திற்கும் மேற்பட்டோர் TB நோயினால் உயிர் இழந்துள்ளனர்.
அவர்களை தாக்கிய TBயானது, Multiple
Drug Resistant, மற்றும் Extreme Drug Resistant தன்மையுடையது, இவற்றை சரி
செய்ய பண்டைய முறையே சரியானதாகும்.
கோவிலின் கல்வெட்டில், மேற்கு தொடர்ச்சி மலைக்கு, வள்ளிபுரத்தில் இருந்து குறுக்கு பாதை இருப்பதாகவும், அங்கு இருக்கும் மூலிகைகள் நாக மாணிக்கதுளியுடன் சேர்த்தால் எலும்புருக்கி
நோயிக்கு நன்மருந்தாகும் என்று குறிப்பு உள்ளது.
சு தா தந்த தகவல்கள்
போதுமானதென்று எண்ணிய குணா, மனதினுள் முடிவொன்றை எடுத்தாள். விஷயம் புரிந்தவளாக வள்ளிபுரத்திற்கு வண்டியை
எடுத்தாள் குணா. அங்கு சென்று என்ன செய்ய போகிறோம், மேற்கு தொடர்ச்சி
மலை என்று வரதன் கூறினானே, இந்த சு தாவிலும் அதை
பற்றியே குறியிருக்கிறான் என்று எண்ணியவாறே வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தாள். தீவிர சிந்தனையில்
இருக்கையில், sir இந்த வரதன் அப்டி எங்கதான்
போனான், உண்மையாவே நாகமாக மாறிடான, இல்ல இது எல்லாம் அவன் மன பிரம்மையா driver
சுப்பு கேட்ட கேள்வி கதையை எழுதி கொண்டு இருக்கும் நந்தனின் சிந்தனை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிட்டார்
போல் இருந்தது.
இதுக்குமேலயும் இந்த கதையை பத்தி யோசிக்க முடியல சுப்பு, அதனால தான் நாம நேராவே இப்போ வள்ளிபுரம்
போறோம், அங்க போனாலாவது எழுத ஏதாவது விஷயம் கிடைக்குமா என்று பார்போம். நந்தனின் வார்த்தைகளில் தோல்வியை ஒப்புக்கொண்ட தோரணை
தெரிந்தது.
யாருடா இவன் நொச்சு நொச்சுனு என்று tension ஆன சுப்பு, பின்னே வந்த பைக்கிர்கு side விட்டான். அந்த பைக் முன்னேறி
செல்ல செல்ல நந்தனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.......
ஆம் அந்த பைக் TN 60J
6058, அதுவும் FZ அதனை ஒட்டிசெல்வதோ ஒரு பெண்...............
சித்தம் இருந்தால், சித்தம் தொடரும்............
Nice One, Nanda keep posting.
ReplyDelete@Anush Kumar, Thank you Anush your support ll keep me to give good posts...
ReplyDeleteits highly informative..but i'm unable to understand the story..:( and one qs,story la vara Nandhan yaru ?????
ReplyDeleteGood narration .. The plot is going racy .. Hats off to your homework and efforts once more :-)
ReplyDelete@Brindha: Thanks Thangachi.... ll explain the story in phone.....
ReplyDeleteAnnae I think, the race is at dead end, it may be continue. and thanks for all ur supports....
ReplyDelete